Followers

Sunday 31 January 2016

குறள் 106


மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (106)

குறள் 414



கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றான் துணை. (414)

குறள 629


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629)

இந்து தர்மத்தை அறிவோம் (அடிப்படை நூல்கள்)




இந்து தர்மத்தை அறிவோம்


4.1) இந்துதர்ம நூல்கள் (ஸ்ருதி நூல்கள்)

ஸ்ருதி வகை நூல்கள் என்பவை இந்துதர்மத்தின் மூலதரமான மற்றும் அடிப்படையான நூல்கள் ஆகும். இவை சான்றுவலிமை மிக்கவை; அதிகாரப்பூர்வமானவை; மனிதரால் உருவாக்கப்படாதவை (அபௌருஷெயம்) மற்றும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை. இவற்றை உணர்ந்து உலகிற்கு வெளிபடுத்தியவர்கள் வேதரிஷிகள். இவை வேதம் என்றழைக்கப்படுகின்றன.

வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். வேதங்கள் நான்காகும். ஒவ்வொரு வேதமும் நான்கு பகுப்புகளைக் கொண்டது.
** நான்கு வேதங்கள் :- ரிக், சாம, யஜுர், அதர்வண.
** நான்கு பகுப்புகள்:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம்.

|| வேதங்களும் மற்ற மதநூல்களும் ஒன்றா?


வேதங்களை மற்ற மதங்களின் மதநூல்களோடு ஒப்பிடுவது அறியாமை ஆகும். வேதங்கள் வெறும் அதை செய்யவேண்டும்; இதை செய்யக்கூடாது எனவும், இதை செய்தால் நரகம்; அதை செய்தால் சொர்க்கம் என்றும் பேசவில்லை. மாறாக வேதங்கள் மிக ஆழ்ந்த, அகன்ற, நுண்ணிய கருத்துகளை எல்லாம் நமக்கு அளிக்கின்றன. வேதங்கள் எந்த மதகுருவையும் வைத்து தொடங்கப்படவில்லை. நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைப் பற்றிய விதியினை எப்படி படைக்கவில்லையோ, அப்படித் தான் வேதத்தையும் எவரும் படைக்கவில்லை. வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவையே தவிர உண்டாக்கப்பட்டவை அல்ல; வெளிப்படுத்தப்பட்டவையே தவிர படைக்கப்பட்டவை அல்ல. எனவே அவை தனிநபர் தொடர்பற்றவை. ’அபௌருஷெயம்’ காலத்திற்குட்பட்டு கடந்து போகும் விதிகளைப் போலில்லாமல், வேத உண்மைகள் யாவும் ஆன்மிகத்துறையைச் சார்ந்தவை. அவற்றுக்கு என்றுமுள்ள தன்மையும் (நித்யம்) மதிப்பும் உண்டு.

முதலாவது வேதமான ரிக் வேதம் மிக முக்கியமானது. ஏனென்றால் அதன் மந்திரப் பாடல்கள் பலவற்றை மற்றைய வேதங்களுக்கு அது தந்துள்ளது. அதுதான் தொன்மையான தொகுப்பு.

|| ரிக் வேதம்


பல நூறு ரிஷிகளால் உணரப்பட்ட மிக அரிய மந்திரங்களையும், ஆழ்ந்த தத்துவங்களையும் கொண்டுள்ளது. உலகிலேயே மிகப் பழைமையான நூல் ரிக்வேதம். இந்த வேதம் தான் இந்துதர்மத்தின் ஆணிவேர். ரிக்வேதத்தின் வானவியல் சார்ந்த குறிப்புகளைக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், இந்துதர்ம யோகிகளும் ரிக்வேதத்தை 12,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் குறிப்பிடுகின்றனர். ஆயினும் அது காலவரையற்றது. எப்போதும் இருந்தது. அதை ரிஷிகள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் உணர்ந்துள்ளனர். ரிக்வேதம் இறைதுதிகளை உள்ளடக்கியது. ’ரிக்’ என்றால் போற்றுதல் எனப் பொருள்படும். ரிக்வேதத்தில் 33 தெய்வங்களைப் (11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 8 வசுக்கள், 2 அஸ்வின்கள்) போற்றி பாடல்கள் உள்ளன. இவர்களே 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் ஆவர். வேதஞானம் இல்லாதவர்கள் 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் என்பதை 33 கோடி தெய்வங்கள் எனக் கருதி இந்துதர்மத்தைப் பற்றி பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள். ரிக்வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சக்திவாய்ந்த முறையில், ஒலியியல் ஞானம் பொருந்திய வகையில் உள்ளன. ரிக்வேதம் 10 மண்டலங்களை உடையது. 1028 மந்திரங்களும், 10,600 வரிகளையும் உடையது. ரிக்வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும், இந்துதர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம், அழிவற்ற பேரறிவு பெட்டகமாக அமைந்துள்ளது.

|| சாம வேதம்


சாம வேதத்தை (The Veda of Song) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். அதாவது பாடல் வேதம். ரிக்வேத மந்திரங்களை எல்லாம் பாடல் வடிவில் வடிவமைத்துக் காட்டும் வேதம் இது. சாமவேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசைவடிவில் ஒளிந்துள்ளது. ”ரிக்வேதம் சொல் என்றால், சாமவேதம் பாடல். ரிக்வேதம் மெய்ஞானம் என்றால், சாமவேதம் மெய்யுணர்வு. ரிக்வேதம் மனைவி என்றால், சாமவேதம் கணவன்.” என உபநிடதம் குறிக்கின்றது. சாமவேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையும் பற்றி கூறுகின்றது.

|| யஜுர் வேதம்


யஜுர் வேதம் சடங்குகளின் வேதம் என கூறப்படுகின்றது. பல்வேறு சடங்குகளைப் பற்றிய அறிவுரைகளை இந்த வேதம் நமக்கு அளிக்கின்றது. உள்ளுணர்வுகளை தட்டியெழுப்பவும், மனத்தை பரிசுத்தமாக்கவும் தேவையான வழிகளை இந்த வேதம் மிக துல்லியமாக வரையறுத்துக் காட்டுகின்றது. யஜுர்வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ரிக்வேத தெய்வங்கள் ஆவர். பல்வேறு வகையான வேள்விகளையும் அதன் செயல்முறைகளையும் யஜுர்வேதம் விளக்குகின்றது. வேள்விகள் செய்யப்படுவது தெய்வங்களுக்காக எனவும், வேள்விகளில் உயர்ந்தது ஆன்மவேள்வியே (ஆத்மயக்ஞம்) என்றும் கூறப்படுகின்றது. நெஞ்சகத்திலே தீமூட்டி ஞானம் எனும் வேள்வியை வளர்த்து, அகங்காரத்தை அதிலிட்டு, மெய்யுணர்வு எனும் அமுதைப் பெறுவதே ஆன்மவேள்வி எனக் கூறப்படுகின்றது.

|| அதர்வண வேதம்


இதுவே நான்காவது வேதமாகும். ரிக்வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வண வேதம் கொண்டுள்ளது. மேலும், சில தாந்திரீக மந்திரங்களையும், தடையிற்குட்பட்ட சடங்காராய்ச்சிகளையும் உடைய வேதம் இது. அணுகுண்டை தவறான செயல்களுக்கு உபயோகிப்பதால் அதை சில நாடுகளில் தடை செய்துள்ளனர். அதேபோல், அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் சில சடங்குகளை தவறான நோக்கத்தில் உபயோகிக்க கூடாது என்பதற்காக அவற்றை தடை செய்து விட்டனர். ஆனாலும் அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் தந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளைச் செய்துள்ளனர். இராவணன் நான்குவேதங்களையும் கரைத்துக் குடித்த பிராமணன் ஆவான். அவன் அதர்வண வேத ஞானத்தை தவறான நோக்கத்தில் உபயோகித்தான். அதனால் அவனுக்கு அவனே அழிவைத் தேடிக் கொண்டான். அதர்வண வேதத்தை நெருப்புடன் ஒப்பிடலாம். நெருப்பை நன்மையாக பயன்படுத்தினால் சமைக்கலாம், குளிர் காயலாம். அதே தவறாக உபயோகித்தால் ஒரு வீட்டையே கொளுத்தலாம்.

|| வேதத்தின் நான்கு பிரிவுகள்


ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம்.

*சம்ஹிதை என்பது தெய்வங்களுக்கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள். இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப் படும் பிரார்த்தனைகள் அவை.

*பிரம்மாணம் என்பது யாகங்கள் செய்வதற்கு அனுஷ்டிக்கப் பட வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறுவது.

*ஆரண்யகம் என்பது தியானம், தவம் போன்றவற்றின் மேற்கோளாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

*உபநிடதம் வேதத்தின் இறுதிப் பகுதியாகும். இவை ’வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகவும் புகழ்ப்பெற்றவையாகவும், இந்துதர்மத்தின் மிக உயரிய உண்மைகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன. இவை தத்துவ ஆராய்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும் பகுதிகள் ஆகும்.

|| நான்கு பிரிவுகள் – நான்கு வகைகள்


வேதத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளுக்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது. பிரம்மச்சரிய (மாணவன்) நிலைக்கு சம்ஹிதைகள், கிரஹஸ்தம் (இல்லறத்தான்) நிலைக்கு பிரமாணம், வனப்பிரஸ்தம் (தவம் புரிபவன்) நிலைக்கு ஆரண்யகம், சன்னியாசம் (துறவி) நிலைக்கு உபநிடதம்.

வேதத்தில் அடங்கியுள்ளவற்றை வேறு ஒரு வகையாகவும் பிரிக்கலாம். சம்ஹிதையும் பிரமாணமும் - கர்ம காண்டங்கள் அல்லது சமய சடங்குகள் பற்றியவை. ஆரணயகம் - உபாசனைக் காண்டம் அல்லது தியானத்திற்குரியவை. உபநிடதம் - ஞான காண்டம் அல்லது அறிவு தரும் பகுதி.

இந்து தர்மத்தை அறிவோம் (இந்துதர்ம நூல்கள்)





இந்து தர்மத்தை அறிவோம்


4) இந்துதர்ம நூல்கள்

இந்துதர்மம் என்பது இந்திய தர்மம். அதாவது பாரத மண்ணில் தோன்றிய பல்வேறு வகைப்பட்ட வழிகள், மார்கங்கள், சமயங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் என எல்லாமே இந்துதர்மம் என்று குறிப்பிடப்படுகின்றன. உண்மையில் எல்லா வழிகளும் தர்மத்தையே அடிப்படையாக கொண்டு விளங்குகின்றன. ஆதலால் அனைத்தும் இந்துதர்மம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. நான்கு வேதங்கள் வேதமொழியிலும் ஏனைய இந்துதர்ம நூல்கள் பாரதமண்ணின் பழம்பெரும் இருமொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அமைந்துள்ளன.

இந்துதர்ம நூல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை: ஸ்ருதி மற்றும் ஸ்மிரிதி.
1) ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டது.
2) ஸ்மிரிதி என்றால் நினைவில் கொள்ளப்பட்டது.


*
ஸ்ருதி வகை நூல்கள் தான் மிகவும் சான்றுவலிமை மிக்கவை; அதிகாரப்பூர்வமானவை; மனிதரால் உருவாக்கப்படாதவை (அபௌருஷெயம்) மற்றும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை. நான்கு வேதங்களும் அதன் உள்ளடக்கமான சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம் மற்றும் உபநிஷத்துகள் இந்துதர்ம ஸ்ருதி வகை நூல்கள் ஆகும். இவை தொன்றுதொட்டு மரபுவழியாக குருசிஷ்ய முறையில் பேணிக் காக்கப்பட்டவை. இவற்றில் சிறு மாற்றங்கள் நேர்ந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆகையால் இவை மாசுப்படாமல் தூய்மையான நிலையில் உள்ளன. அதனால் தான் சனாதன தர்மத்தில் ஸ்ருதிவகை நூல்களுக்கு தலைமைத்துவம் தரப்படுகின்றது. வேதங்கள் வேதமொழியில் அமைந்துள்ளன.

*
ஸ்மிரிதி வகை நூல்கள் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்டவை. ஸ்மிரிதி வகை நூல்கள் ஸ்ருதி வகை நூல்களை விட சான்றுவலிமை குறைந்தவை. ஸ்மிரிதிகள் ஸ்ருதி வகை நூல்களுக்கு முரணாக இருக்க கூடாது. ஒரு குறிப்பிட்ட நபரால் உருவாக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்திருப்பவை ஸ்மிரிதிகள். நான்கு வேதங்களைத் தவிர மற்ற இந்துதர்ம நூல்கள் யாவும் ஸ்மிரிதி வகையைச் சேர்ந்தவையே. உதாரணமாக, உபவேதங்கள், வேதாங்கங்கள், இதிகாசங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள், ஆறுதரிசனங்கள் மற்றும் பல.

இதையடுத்து தமிழில் தர்மசாஸ்திரமாக ‘தமிழ்மறை’ எனப்படும் திருக்குறள் விளங்குகின்றது. பக்தி நூல்களாக பன்னிரு திருமுறையும் திவ்விய பிரபந்தமும் திகழ்கின்றது. சங்க காலத்து இலக்கியங்களான எட்டுத்தொகை மறுறும் பத்துப்பாட்டு எனப்படும் பதினெட்டு நூல்களும் பக்தியையும் தர்மத்தையும் அதிகமாகப் போதிக்கின்றன. மேலும், கம்பரின் கம்பராமாயணமும் மற்றும் வில்லிபுரத்தாரின் வில்லிபாரதமும் புகழ்ப்பெற்றது. அதையடுத்து இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, ஆசாரக்கோவை என பல்வேறு நூல்கள் நன்னெறியையும் நல்வாழ்விற்கான வழியையும் போதிக்கும் நூல்களாக அமைந்துள்ளன.

அத்தனை நூல்கள் இருந்தாலும் தலைச்சிறந்த தர்மசாஸ்திர நூலாக திருக்குறள் அமைந்துள்ளது. இது அறம், பொருள், இன்பம் எனும் புருஷார்த்தங்களைப் போதிக்கும் நூல். இதை அருளியவர் திருவள்ளுவர். “இறைவனின் திருவடியில் சரணடைந்தார் பிறவி எனும் பெருங்கடலை கடப்பார்” என்று திருவள்ளுவர் வீடுபேற்றையும் விளக்கியுள்ளார். மாணவன், இல்லறத்தான், தவசி, துறவி என எல்லோருக்கும் பொருத்தமான நூலாக திருக்குறள் அமைந்துள்ளது.

சைவ சமயத்தவருக்கு பன்னிரு திருமுறை நூல்களும் வைணவ சமயத்தவருக்கு திவ்விய பிரபந்த நூல்களும் தலையாய பக்தி மற்றும் தத்துவ மூலங்களாக அமைந்துள்ளன.

இந்து தர்மத்தை அறிவோம் (மதமில்லை, தர்மம்)



3) இந்து மதமில்லை, தர்மம்


இந்துக்களைப் பொறுத்தவரை ‘இந்து’ என்றால் மதமல்ல, தர்மம். இந்த தர்மம் தான் பாரத மைந்தர்களின் வாழ்வியல் நெறி. வாழ்க்கையுடைய ஒவ்வொரு அம்சத்திலும் இது ஒன்றிவிட்டது. இந்து என்ற பெயர் புதியதாக இருந்தாலும், நம்முடைய இந்த வாழ்க்கைமுறை பல ஆயிர ஆண்டுகாலம் பழைமையானது; அதேசமயம் ஆழ்ந்த ஆன்மீக அறிவியல் சார்ந்த அர்த்தமுடையது. சிலர் இந்து என்ற சொல்லை விரும்பாமல், தமிழ் பாரம்பரியம், தமிழியல், தமிழ் வாழ்வியல் போன்ற பல்வகை பெயர்களில் அழைக்கின்றனர். தேன் என்று அழைத்தாலும் மதுரம் என்று அழைத்தாலும் தேனின் சுவை மாறிவிடுமா என்ன?

இந்து எனும் சொல் இந்திய சமயங்களை எல்லாவற்றையும் குறித்தாலும், இன்றைய நிலையில் அச்சொல் குறைப் பொருத்தமானதே. நம்முடைய ஆழ்ந்த, அகன்ற, பரந்த சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் குறிக்க ஏற்றச் சொல் ‘சனாதன தர்மம்’ என்பதே ஆகும். அழிவற்ற அறநெறி என்பதே இதன் பொருளாகும். அறநெறியைத் தோற்றுவித்தவர் என யாரும் இல்லை. அது எப்போதும் நிலைத்திருப்பது. ஆனால், அந்த அறநெறியை உணர்ந்து நமக்கு சொன்னவர்கள் நம்முடைய முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும்.

புவியீர்ப்புச் சக்தியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அதை கண்டுபிடித்தவர் நியூட்டனா? இல்லை. புவியீர்ப்பு சக்தி எப்போதும் இருந்ததே. அப்படியொன்று இருக்கின்றது, அந்த ஒன்றுதான் பூலோக ஜீவர்களையும் மற்ற பொருட்களையும் பூமியின் மேற்பரப்பில் ஒட்ட வைத்துள்ளது என்பதை நியூட்டன் உணர்ந்தார். இது ஒருவகையான மெய்யுணர்வு. ஒருவேளை புவியீர்ப்பு சக்தி இல்லையென்றால் கண்டிப்பாக பூலோகத்தின் எல்லாப் பொருட்களும் வான்வெளியில் மிதக்கும். இயற்கையின் ஏதாவது ஓர் உறுப்பினர் தன் தர்மத்தை மறந்துபோனால், அதனால் ஏற்படும் பாதிப்பானது மிகவும் துன்பமானது. ஆனால் இதுவரை இயற்கையின் எந்த உறுப்பினரும் தர்மத்தை மீறி செயல்பட்டதில்லை. மனிதர்களைத் தவிர. ஆறறிவுவுடைய மனிதர்களாகிய நாம் தருமத்தை மீறி செயல்படுகிறோம். நம்முடைய செயல்களின் பலனால் உலகவாழ்க்கை உருகுலைகின்றது. கண்டபடி இயற்கையை நாசம் செய்கிறோம், பேரிடர்கள் ஏற்படுகின்றன.

சனாதன தர்மம் என்றால் எல்லா மனிதர்களின் கடமையையும் குறிக்கும். இங்கு ஜாதி, மதம், இனம், நாடு, மொழி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றிற்கு இடமில்லை. ‘வசுதைவ குடும்பகம்’ எனும் உபநிடத கருத்துபடி உலகமே ஒரு குடும்பம், இந்த குடும்பத்தை நன்முறையில் வழிநடத்துவது எல்லா உறுப்பினரின் கடமையும் ஆகும்.

சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை
மனிதவாழ்க்கைக்கு முக்கியமான சில பண்புகள் எல்லாரின் மனத்திலும் விதைக்கப்படுகின்றன. அவை:
1) நேர்மை,
2) துன்புறுத்தாமை,
3) தூய்மை (மனம், உடல், வாக்கு, செயல்),
4) நல்ல எண்ணம்,
5) பரிவு,
6) பொறுமை,
7) அடக்கம்,
8) எளிமை,
9) பெருந்தன்மை,
10) மிதமான போக்கு

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு புகழ்ப்பெற்ற விரிவுரையாளர், கிம் க்னாட் தனது ‘Location of Religion: A spatial Analysis (2005)’ எனும் புத்தகத்தில் ”சனாதன தர்மத்தின் துவக்கம் மனிதகுல தோன்றலுக்கு முந்தையது, அது காலத்தையே முந்தையது. அதன் உண்மைகள் எல்லாம், பின்னாளில் ஸ்ருதி வடிவில் வேதங்களாக தோன்றின.” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு புகழ்ப்பெற்ற ஆராய்ச்சியாளர். [Kim Knott, Professor of religious studies at Lancaster University]

இந்து தர்மத்தை அறிவோம் (யார் இந்து?)


இந்து தர்மத்தை அறிவோம்


2) யார் இந்து?

மேற்கத்தியர்கள் ‘இந்து’ என்பதை ஒரு மதமாக கருதினாலும், இந்து என்பது ஒரு மதமல்ல. ஒரு குறிப்பிட்ட மதநூல், ஒரு குறிப்பிட்ட மதபோதகர், எல்லைக்குட்பட்ட கோட்பாடுகள் போன்றவற்றை சார்ந்திருக்கும் வழிகள் தான் ’மதம்’ ஆகும். இந்து அப்படியல்ல. எல்லையற்ற நூல்கள், ஏராளமான ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள், எல்லையற்ற சிந்தனைகள் பரந்த கோட்பாடுகள். எனவே இந்துவை தருமம் எனக் குறிப்பிடலாம். தருமம் என்பது யாராலும் தோற்றுவிக்கப்படாதது; எதையும் யாரையும் சார்ந்திருக்காதது, அதேவேளை எல்லோரிடமும் இருப்பது, எல்லோர்க்கும் உரியது. தருமம் என்பது எல்லையற்றது (infinity). செடிகொடியாகினும், மிருகங்களாயினும், உயிரற்றவைகளாகினும், சூரிய சந்திரனாகினும் அனைத்துமே தர்மத்தின்படி தான் செயல்படுகின்றன. மனிதர்கள் மட்டும் மனம் மற்றும் புலன்களின் படி செயல்பட்டு தர்மங்களை அடிக்கடி மறக்கின்றனர்.

பாரதமண்ணில் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பல சமயங்களும், மார்கங்களும் தோன்றின. ஒரே இறைவனைக் கொண்ட மார்கங்களான சைவமும் வைணவமும், பல தெய்வங்களைக் கொண்ட மார்கங்களான ஸ்மார்த்தம், பெண் தெய்வங்களைக் கொண்ட சாக்தம், இயற்கையை வணங்கும் மார்கங்கள், சூரியனை வணங்கும் சௌரம், சமணம் போன்ற நாத்தீக மார்கங்கள், மனிதநேய மார்கம், பிரம்ம சமாஜ் போன்ற அருவ மார்கம் என பல்வேறு மார்கங்கள் தர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாகின. பாரத நாட்டின் மற்றொரு பெயர் ஹிந்துஸ்தானம், இங்கு தோன்றிய சமயங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக ‘ஹிந்து’ என இந்திய அரசியல் சட்டம் குறிக்கின்றது. ஆகவே, சைவராக இருந்தாலும், வைணவராக இருந்தாலும், சமணராக இருந்தாலும், வேதாந்தனாக இருந்தாலும், யோகியாக இருந்தாலும், கிராமதேவதைகளை வணங்குபவர்களாக இருந்தாலும் எல்லோரும் இந்துவே. இந்த மண்ணில் தோன்றிய நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள், இந்து. இந்தியாவிற்கு வெளியே தோன்றிய மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்து-அல்லாதவர். இந்துக்களை சனாதன தருமிகள் என்று குறிப்பிடலாம்.

இந்து எனும் சொல்லுக்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. இம்+து = இந்து. மற்றவர்கள் அனுபவிக்கும் இம்சைகளை துடைப்பவன் எனப் பொருள்படும். இன்றைய நிலையில் இந்து எனும் சொல் சனாதன தருமத்தைக் குறிக்கப் பயன்படுகின்றது. சனாதன தர்மம் என்பது தர்மநியதி, கர்மநியதி, எங்கும் நிறைந்த பரம்பொருள், பிறவிச்சுழற்சி, மறைநூல்கள் போன்ற அடிப்படையை உடையது. சமணமும் பௌத்தமும் நாத்தீக மதங்கள் என்பதால் அவை சனாதன தர்மம் அல்ல. முன்பு சொல்லியது போலவே இங்கு அசைவன, அசையாதவன என எல்லாமே தருமத்தின்படி தான் செயல்படுகின்றன. இந்து என்றால் தர்மத்தின்படி செயல்படுபவன். தருமம் என்பது இறைவனின் நியதி. ஆகவே, இந்த பிரபஞ்சத்தின் எல்லா உறுப்பினரும் உண்மையில் ஓர் இந்து தான். ஆனால் உலகவாழ்க்கையில் அவர்கள் தங்களின் சூழல்களுக்கு ஏற்ப மாறி சில சமயங்களில் வழித்தவறி அதர்மமான நம்பிக்கைகளில் சிக்குண்டு உலகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் அதர்மபாதையில் பயணிக்கிறோம் என்ற பக்குவம் ஏற்பட்டவுடன் தர்மபாதைக்குத் திரும்புகின்றனர். பக்குவம் ஏற்பட சில ஆண்டுகளும் ஆகலாம்; சில பிறவிகளும் ஆகலாம். இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்கள், இந்தியாவிற்குள் வந்து தர்மத்தை உணர்ந்து இந்துதர்மத்தை ஏற்கும் போது அதனை நாம் “தர்மத்திற்குத் திரும்புதல்” எனவே குறிப்பிடுகின்றோம். அது மதமாற்றம் அல்ல.

மெய்யுணர்வு அடைய ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவன் எல்லாமே இந்துதான். இந்துதர்மம் பற்பல பாதைகளையும், ஒவ்வொரு பாதைகளிலும் பற்பல சாஸ்திரநூல்களையும், குருமார்களையும் கொண்டு திகழ்கின்றது. எப்படியெல்லாம் வாழவேண்டும்; எப்படியெல்லாம் வாழக் கூடாது என வரையறுத்துக் காட்டுகின்றது. எது நல்லது, எது கெட்டது, எது தர்மம், எது அதர்மம் என துல்லியமாக விளக்குகின்றது. அத்தனையையும் கற்றுக் கொடுத்துவிட்டு, இனி உன் வாழ்க்கை உன் கையில், எப்படி வாழப் போகிறாய் என முடிவுசெய் என்று சொல்கின்றது. கட்டாயம் எதுவுமில்லை; கடவுளை நம்பிதான் ஆகவேண்டும் என்று எதுவுமில்லை. கோவிலுக்குச் செல்லவேண்டும் என்றும் எதுவுமில்லை. கோவில்வழிபாடு பக்தியோகத்தின் ஓர் அங்கமே. ஒவ்வொன்றும் ஊக்குவிப்பு நிலையிலே அமைந்துள்ளன. தினமும் சில கிலோமீட்டர் ஓடினால் உடல் நலமாக இருக்கும் என மருத்துவர் ஊக்குவிக்கலாம், நீ ஓடாவிட்டால் நீ நரகத்திற்குப் போவாய் என பயம் காட்டலாமா? அல்லது நீ ஓடியே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தலாமா? அல்லது நீ வேறு டாக்டரை நாடி சென்றால் உனக்கு மரணதண்டனை என விதிக்கலாமா?

இந்துதர்மம் கடவுளை நம்ப ஊக்குவிக்கின்றது. சாஸ்திரங்களைக் கற்க, அதன்படி நடக்க ஊக்குவிக்கின்றது. கோவிலுக்குச் செல்ல, பூஜைகள் செய்ய, தியானம் மேற்கொள்ள, யோகா பயில ஊக்குவிக்கின்றது. பின்பற்றினால் நமக்கு பயன் கிடைக்கும்; பின்பற்றாவிட்டால் இழப்பு நமக்கு தான்.

இந்துதர்மம் ஐந்து விஷயங்களை ஆழமாக போதிக்கின்றது.
1) ஐம்புலன்களையும் மனத்தையும் அடக்கவேண்டும்.
2) யோகாப்பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபட்டு உடலையும் மனத்தையும் உறுதியாக வைத்திருக்க வேண்டும்.
3) நல்லஞானத்தைப் புகட்டும் நூல்களைக் கற்கவேண்டும், பிறருக்கும் கற்பிக்கவேண்டும்.
4) மனத்தில் இறைபக்தி கொண்டிருக்கவேண்டும்.
5) சுயநலமின்றி செயல்புரிய வேண்டும்.

இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்றை உடையவனாக இருந்தாலும், அவன் இந்துவே.

இந்து தர்மத்தை அறிவோம் (பெயர்க்காரணம்)



















இந்து தர்மத்தை அறிவோம்



1) பெயர்க்காரணம்

இந்துதருமம் உலகிலேயே மிகப் பழையதும் மனிதர்கள் காலத்திற்கு முந்தையதும் என்றாலும், ‘இந்து’ என்ற பெயர் அண்மையதே. எப்படி இந்தியா எனும் பெயர் அண்மையதோ, அதேபோல் இந்து என்ற பெயரும் அண்மையதே. அண்மையதே தவிர, இந்து எனும் பெயர் அந்நியது அல்ல. பண்டைய பாரதநாட்டில், யோகி, யோகினி, பக்தன், சன்யாசி, சாம்கியவாதி, வேதாந்தினி, முனி, பண்டிதன், சுவாமி, சித்தன், சைவன், வைணவன், பௌத்தன் என்ற பெயர்கள் நிலவியிருந்தனவே தவிர இந்து என்ற பெயர் அப்போது இல்லை. ஆதியும் அந்தமும் இல்லா எல்லாருக்கும் உடமையான, சராசரத்தின் எல்லாப் பொருள்களும் கட்டுப்பட்டு செயல்படும் அறநெறிக்கு அண்டத்தின் ஒரு புள்ளியான பூலோகத்தில் குடியிருக்கும் மானிடர்கள் வைத்த பெயரே “இந்து தர்மம்”.

கிரேக்கர்களும் பார்ஸிகளும் சிந்து நதிக்கு அப்பாலிருக்கும் தேசத்தைப் சிந்துஸ் என்றும் ஹிந்துஸ் என்றும் குறிப்பிட்டனர். (டரியுஸ் கல்வெட்டு கி.மு. 550-486) சிந்துநதியைப் பற்றிய குறிப்பு ரிக்வேதத்தில் இடம்பெற்றுள்ளது. ரிக்வேதத்தில் சப்த சிந்து என்று குறிக்கப்படுகின்றது. நீர் வழிந்தால் நீர் சிந்துகிறது எனக் கூறுவார்கள், சிந்துநதி செழிப்பாக வழிந்தோடுவதால் அதை ‘சிந்து’ எனப் பெயரிட்டிருக்கலாம்.

இவ்வாறு சிந்துநதிக்கு அப்பால் இருக்கும் கண்டத்தையும், அங்கு வாழும் மக்களையும் ‘சிந்துக்கள்’, ‘ஹிந்துஸ்கள்’ என்றெல்லாம் அழைத்தனர். 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ‘ஹிந்துஸ்தான்’ என்று தென் ஆசியாவைக் (இந்தியா, வங்காளம், ஆப்கானிஸ்தான், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, பூத்தான்) குறிக்கின்றது. [Thapar 1993, p.77] 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன வரலாற்று நூலில் ‘ஹிந்து’’’’ எனும் சொல் பாரத மண்ணைக் குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. [Record of the Western Regions by Xuanzang]

பண்டைய பார்ஸிகள் (Zoroastrians) இந்தியர்களை ஹிந்தூ என குறிப்பிட்டதன் காரணமாக, அரபிகள் இந்தியர்களை அல்-ஹிந்த் எனக் குறிப்பிட்டனர். 13-ஆம் நூற்றாண்டில், ஹிந்துஸ்தான் எனும் பெயர் பரவலானது. சமஸ்கிருதத்தில் ஸ்தானம் என்றால் இடம், நாடு எனப் பொருள்படும். ஹிந்துஸ்தான் என்பது ஹிந்துநாடு எனப் பொருள்படும். அதன்பிறகு 1450-ஆம் ஆண்டில்’ஹிந்துகா’ எனும் சமயநூலை காஷ்மீர் பண்டிதர்கள் படைத்தனர். ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் ‘ஹிந்துகுஷ்’ எனும் இடம் அமைந்துள்ளது. அதன் இயற்பெயர் பாரியாத்திர பர்வதம் ஆகும். அரபி முஸ்லீம்கள் பாரத மண்ணில் அத்துமீறி நுழையும் முன்னர், பல லட்ச ஹிந்துக்களைக் கொன்று குவித்த இடம் தான் அது. அவர்களின் வெறித்தன வெற்றியைக் கொண்டாடவே அந்த இடத்திற்கு ஹிந்து குஷ் என்ற பெயர் சூட்டினர். ஹிந்து குஷ் என்றால் ஹிந்துக்கள் (இந்தியர்கள்) படுகொலை எனப் பொருள்படும். இதை 1333-ஆம் ஆண்டைச் சேர்ந்த Ibn Battutah எனும் முஸ்லீம் வரலாற்று பதிப்பாளன் தன் பதிப்பேட்டில் குறிக்கின்றான்.

மேலும், வங்காளத்தைச் சேர்ந்த பழைய சமயநூல்களான சைத்தன்ய பாகவதம் மற்றும் சைத்தன்ய சரிதாம்ரிதம் எனும் நூல்கள் ’ஹிந்து’ எனும் சொல்லைக் குறிப்பிடுகின்றன. இந்நூல்களில் முஸ்லீம்களை யவனா (அந்நியர்கள்) என்றும் மிளெச்சா (காட்டுமிராண்டிகள்) என்றும் குறிப்பிட்டுள்ளனர். அன்றைய காலத்தில் மதவெறி தாக்குதல்களும், கட்டாய மதமாற்றங்களும், கற்பழிப்புகளும் உச்சத்தில் இருந்தன. அந்த சமயத்திலே ‘ஹிந்துகுஷ்’ எனும் மலைத்தொடரில் இஸ்லாமியர்கள் பல மில்லியன் இந்துக்களை பலி கொடுத்தனர். தங்களின் ஆட்சி நடக்கிறது என்ற அதிகாரத்தில் இந்துக்களுக்கு இத்தகைய தீராவேதனைகளைத் தருவித்தனர் முஸ்லீம்கள். அந்த வலிவேதனைகளில் உருவாகின வங்காள சமயநூல்கள் முஸ்லீம்களின் உண்மையான சொரூபத்தை தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் முஸ்லீம்கள் (அந்நியர்கள்) இந்துக்களுக்கு (இந்திய மக்களுக்கு) செய்த கொடுமைகளை வங்காள நூல்கள் குறிக்கின்றன. ஆட்சியைப் பிடிக்காதவரை தான் அமைதி; ஆட்சியைப் பிடித்துவிட்டால் அராஜகம், அதிகாரம், அழிவு. மியான்மார் பௌத்தகுரு ஒருமுறை “புத்தர் அமைதியைப் போதித்தது உண்மைதான். ஆனால், நம்மைக் கொல்ல காத்திருக்கும் வெறிப்பிடித்த மிருகத்திடம் சகித்துப் போவது அமைதி அல்ல. அது கோழைத்தனம். மனிதகுலத்திற்கே ஆபத்தாக இருக்கும், நெஞ்சில் வஞ்சகம் நிறைந்த அந்த மிருகத்தை அழிக்காவிட்டால் நாளை பூமியில் அமைதியே இல்லாமல் போய்விடும்.” என்றார்.

அதன் பின் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தமாலா எனும் பக்திநூல் ‘இந்துதருமம்’ எனும் சொல்லைக் கொண்டு இந்தியாவில் தோன்றிய தருமநெறி வாழ்வைக் குறிப்பிடுகின்றது. அதன்பின்னர் வணிகர்களாக நுழைந்து பின் நாட்டையே தட்டிப்பறித்த ஐரோப்பியர்கள், எல்லா இந்திய சமயங்களையும் ஒட்டுமொத்தமாக ‘ஹிந்து’ எனக் குறிப்பிட்டனர். அன்று முதலாக, இந்திய மண்ணில் தோன்றிய சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், சமணம், வேதாந்தம், கிராமபுர நம்பிக்கைகள் மற்றும் பற்பல சமயங்கள் எல்லாமே ஒட்டுமொத்தமாக ஹிந்துசமயம் என்று அழைக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்தியா எனும் சொல் இந்து எனும் சொல்லில் இருந்து பிறந்ததே! இந்தியாவின் இயற்பெயர் ‘பாரதம்’. (மகாபாரதம்: பாரதவர்ஷம்)

ஆசியாவில் அமைந்திருக்கும் இந்தோனேசியா எனும் நாடு ஒரு காலத்தில் இந்து நாடாகத் திகழ்ந்தது. இந்துவின் தேசம் என்பதால் அதன் பெரும்பாலான இடங்கள் தமிழ்/சமஸ்கிருத மொழிகளில் அமைந்திருக்கும். இந்தோனேசியா எனும் பெயர் ‘இந்து’ எனும் சொல்லில் இருந்தே பிறந்தது. இன்னமும் இந்தோனேசியாவில் இராமாயணம்/மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எல்லா மதத்தினராலும் போற்றிப் புகழப்படுகின்றன.

உண்மையில், பாரத மண்ணில் உதித்த மார்கங்கள் தருமநெறிகள், கர்மநியதி, மறுபிறப்பு, பரம்பொருளாகிய ஈஸ்வரன், வேதங்களை முதன்மையாகக் கொள்ளல் ஆகிய பல்வேறு முக்கிய கருத்துகளை உடையதாக திகழ்பவை ஆதலால் அவை யாவும் ‘சனாதன தருமம்’ என்றே நம் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. சுவைமிகுந்த கனிகள் நிறைந்துள்ள வியத்தகு விருட்சமே சனாதன தர்மம். சனாதன தர்மம் என்ற இந்த விருட்சம் தருமநெறி எனும் வேரால் தாங்கிப் பிடிக்கப்படுகின்றது.