Followers

Saturday 4 March 2017

திருவாசகம் - Thiruvasagam


திருவாசகம்
சிவபுராணம் (1)

பொருள்:
நமசிவாய எனும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சரம்) மந்திரம் வாழ்க. திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரமும் கூட என் நெஞ்சத்திலிருந்து பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பல உருவங்கொண்டு இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க!

விளக்கம்:

நமசிவாய எனும் திருவைந்தெழுத்து மந்திரம் சிவபெருமானைக் குறிக்கும். ந-கரம் திருவடியாகவும், ம-கரம் உடலாகவும், சி-கரம் தோளாகவும், வ-கரம் முகமாகவும், ய-கரம் முடியாகவும் அமைந்துள்ளதாக சாஸ்திரம் கூறும்.
“ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடுந் திருவடியி லேநகரம் -
கூரும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்”

கண்ணிமைக்கும் நேரம் கூட நெஞ்சகத்தில் இருந்து பிரியாதவன் என்றமையால், இறைவன் அகத்தே நெஞ்சத்தாமரையில் வீற்றிருக்கும் தன்மை விளக்கப்படுகின்றது. “கோகழியாண்ட குருமணி” என்றமையால், இறைவன் புறத்தே திருப்பெருந்துறையில் தம்மை ஆண்டருளின பெருமையையும் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

”ஏகன் அநேகன்” என்றால் ‘ஒன்றன், ஒன்றல்லன்’ எனவாகும். இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாகவும் திகழ்கிறான் என்ற உண்மையும் விளக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment