Followers

Tuesday 30 June 2020

சீதை தான் காளி!!

#இராமாயணத்தில் ஹனுமான் இராவணனிடம் சீதை வேறு யாருமில்லை, சீதை தான் மஹா காளி என எச்சரிக்கிறார்.




"நீங்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் சீதை வேறுயாரும் இல்லை. காலராத்திரி எனப்படும் காளி. ஒட்டுமொத்த இலங்கையையும் சொற்பநொடியில் சர்வநாசமாக்க கூடிய சர்வ வல்லமை பெற்றவர்." (5-51-34)


யாம் சீதா இதி அபிஜானாஸி யா இயம் திஷ்ததி தே வஸே

கால ராத்ரீ இதி தாம் வித்தி ஸர்வ லங்கா வினாஷினீம் (வால்மீகி #இராமாயணம் 5:51:34)


ஒவ்வொரு பெண்ணும் காளியின் தன்மையைக் கொண்டுள்ளனர். பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது மிகப் பெரிய அழிவை உண்டாக்கும்.


இதுவே #தர்மசாஸ்திரத்தில்


"எங்கே பெண்களுக்குத் தக்க மரியாதைகள் தரப்படுகின்றதோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. எங்கே பெண்கள் அவமதிக்கப்படுகின்றனரோ, அங்கே எந்த காரியமும் வெற்றியடையாமல் துன்பத்திலே முடிகின்றன." 

('யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே' எனத் துவங்கும் சுலோகம்)


No comments:

Post a Comment