Followers

Thursday 24 March 2016

மூன்று வகை தர்மம்

மூன்று வகை தர்மம்


தர்மச் சக்கரம்



தர்மம் என்றால் 'பிரபஞ்சத்தின் செயல்பாட்டுடன் இசைந்து முறையாக வாழும் நெறி' எனப் பொருள்படும்.

தர்மநியதிக்கு எதிரானது அதர்மம் எனப்படும். இந்துமதத்தின் உண்மையான பெயர் 'சனாதன தர்மம்' ஆகும். 'எப்போதும் நிலைத்திருக்கும் அறநெறி' என்பதே இதன் பொருளாகும்.

இந்த அறநெறி இந்தியா (இந்துஸ்தான்)-இல் உணரப்பட்டதால் இதற்கு 'இந்துதர்மம்' என்ற பெயர் அண்மைய நூற்றாண்டில் வழங்கப்பட்டது.

"தர்மத்தை விட மேன்மையானது எதுவுமில்லை. தர்மமே இந்த அண்டம் முழுவதையும் தாங்குகின்றது. தர்மமே சத்தியம்."
-யஜுர்வேத பிருகதாரண்யக உபநிடதம் 1:4:14-



மூவகை தர்மம்


வாத்ஸயாயனர் தனது நியாயசூத்திர பாஷ்யத்தில் மூன்றுவகை தர்மங்களைக் குறிப்பிடுகிறார்.


1) உடல் தர்மம் (உடலால் ஆற்றவேண்டிய அறம்)


அ) தானம் - தேவைபடுவோருக்கு தானம் தருதல்
ஆ) துயர்துடைப்பு - துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்து அவர்களின் கண்ணீரை துடைத்தல்
இ) சேவை - சக மக்களுக்கும் உலக உயிர்களுக்கும் சேவை செய்தல்


2) மன தர்மம் (மனத்தால் கடைப்பிடிக்கவேண்டிய அறம்)


அ) கருணை - உயிர்களிடம் கருணை கொள்தல்
ஆ) திருப்தி - தன்னிடம் இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்தல்
இ) இறைநம்பிக்கை -
இறைவனைப் பற்றிய நம்பிக்கை மனதில் நிலைத்திருத்தல்


3) வாக்கு தர்மம் (வாய்ச்சொற்களால் கடைப்பிடிக்கவேண்டிய அறம்)


அ) உண்மை - ஒன்றைப்பற்றி தீர விசாரித்து மெய்யென அறிந்தபின் பேசுதல்
ஆ) இனிமை - கசப்பான கடுஞ்சொற்களைத் தவிர்த்துவிட்டு இனிய சொற்களைப் பேசுதல்
இ) பணிவு - எல்லோரிடமும் மரியாதையுடன், பணிவாகப் பேசுதல்













No comments:

Post a Comment