Followers

Thursday 31 March 2016

திருக்குறள் (தவம்)

தவம் (அதிகாரம் 27)


உற்றநோய் தோன்றல் உயிர்க்கும்உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. (261)



தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது. (262)



துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்? (263)



ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)



வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயல்ப் படும். (265)



தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு. (266)



சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267)



தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும். (268)



கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269)



இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)

No comments:

Post a Comment