Followers

Saturday 26 March 2016

இந்துதர்மத்திற்கு திரும்பிய ஹாலிவுட் நடிகை




ஜூலியா ராபர்ட்ஸ்
ஜூலியா ராபர்ட்ஸ், ஆஸ்கார் விருது பெற்ற பிரபல அமெரிக்க நடிகை ஆவார். உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் இவரும் ஒருவராவார். இவர் 30-க்கும் மேற்பட்ட புகழ்ப்பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜூலியா நீண்டகாலமாக ஆன்மீகத்தைப் பற்றி நிறைய தேடல்களை மேற்கொண்டு வந்தார். இறுதியாக இந்துதர்மத்தைப் பற்றிய தேடலில் ஈடுபட்டு இந்துதர்ம நூல்களையும் கற்க ஆரம்பித்தார். இந்துதர்மத்தின் ஆழ்ந்த அகன்ற தத்துவங்களில் ஈடுபாடு கொண்டார்.

2009-ஆம் ஆண்டு, இவர் தன் குடும்பத்தினருடன் ஹரியானாவில் அமைந்திருக்கும் கோவில்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். அப்போது இவரும் இவரின் குடும்பத்தினரும் இந்துதர்மத்தை ஏற்றுக்கொண்டனர்.

ஜூலியா தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் லக்ஷ்மி, கணேஷ், பலராம் கிருஷ்ணா என்று பெயரிட்டார். இவர்களும் தற்போது முறையான இந்துதர்ம கல்வி பெற்று வருகின்றனர்.



ஜூலியா சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். திரைத்துறையில் இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் அர்த்தமுள்ள நிறைய தத்துவங்களை விளக்குவதாகவே அமைந்துள்ளன. இவர் தன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதியை அமெரிக்காவின் சமூகசேவை நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றார். நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் நேரடியாக சென்று உதவி வருகின்றார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி இவருக்கு விருதுகளும் வழங்கபட்டுள்ளன.


ஜூலியாவும் அவரின் குருவும்

No comments:

Post a Comment