Followers

Wednesday 30 March 2016

விருக்ஷாசனம் (மரம் போன்ற ஆசனம்)

விருக்ஷாசனம்
(மரம் போன்ற ஆசனம்)



விருக்‌ஷாசனம்

விருக்‌ஷம் என்றால் மரம் எனப் பொருள்படும். ஆசனம் என்றால் இருக்கை அல்லது பாவனை எனப் பொருள்படும். எனவே விருக்‌ஷாசனம் என்பதை மரம் போன்ற பாவனை எனப் பொருள் கொள்ளலாம். விருக்‌ஷாசனம் மிகவும் பிரபலமான ஒரு யோகாசனம் ஆகும்.

|| செய்முறை ||


  1. ஒற்றைக் காலில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் காதுகளை ஒட்டி கூப்பிக்கொள்ள வேண்டும்.
  2. நிற்கும் கால் நிலையாக, நேராக இருக்க வேண்டும்.
  3. நிற்கும் காலின் தொடை மீது மடித்துவைக்கப்பட்ட கால் பாதம் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.
  4. மடித்துவைக்கப்பட்ட கால் பாதம், நிற்கும் காலின் மீது முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்.
  5. மடித்துவைக்கப்பட்ட கால் 90 பாகை (டிகிரி) அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.
  6. மடித்துவைக்கப்பட்ட காலின் தொடைக்கும் குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையே ஆகச் சிறந்த நிலை (குதிகால் மூட்டுக்காலை தள்ளும்படி நிற்பதை தவிர்த்து விடவும். குதிகால் மூட்டுக்கு மேலே பதிந்திருப்பது சாலச் சிறப்பு)
  7. இதேபோன்று 30 முதல் 60 நொடி வரை பயின்றி, பின்னர் கால்களை மாற்றி பயிலவும்.

|| பலன்கள் ||

  • கால்களின் வலிமையையும் தாங்கும் திறனையும் கூட்டுகிறது.
  • பாதங்களின் இணைப்புகள், ஜவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் வலிமை ஊட்டுகிறது.
  • இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் பாதம் முதல் முதுகெலும்பு வரையில் முழு காலுக்கும் வலிமை கூடும்.
  • காலின் வடிவத்தில் அழகு கூடும்.
  • இடுப்புப் பகுதியின் ஸ்திரத்தன்மையைக் கூட்ட உதவும்.
  • இடுப்பெலும்புகளின் வலிமை கூடும்.
  • விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, தடுமாற்றத்தைப் போக்குகிறது.
  • கவனக் குவிப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.
  • தொடர்ந்து செய்துவந்தால் மனதின் தடுமாற்றங்களும் பதற்றங்களும் குறைந்து மனச் சமநிலை கிடைக்கும். படிப்படியாக நம் வாழ்விலும் சமநிலை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment